புதுச்சேரியில், இசைத்துறையில் மிளிர்ந்து, சிறந்திருக்கக்கூடிய இசைவாணர்கள் பலர் உள்ளனர். சமுதாய கருத்துக்களை பாடக்கூடியவர்கள் ,திரைஇசை பாடல்களை பாடுவோர். வழிபாட்டு பாடல் என இவர்களில் வகைபடுகின்றனர் .
இஸ்லாமிய பாடல்களை பாடுவதுடன் இனிய கருதுக்களை கொண்ட தரமான பாடல்களை பாடுவதுடன் மேடைதோறும் இசைக்கும் இசைவாணர்கள் வரிசையில் தமிழகம் மற்றும் புதுசேரியில் புகழ் பெற்று விளங்கும் இன்னிசைச்சுடர், கலைரத்னா, கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது கடந்த 42 வருடங்களாக இந்த இசைத்துறையில் புகழ் ஈட்டி உள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, சௌதி அரேபியா, இலங்கை,மற்றும் பல நாடுகளுக்கு சென்று இசை தொண்டு செய்து வரும், கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது, புதுவை அரசின் கலைமாமனி விருதும் பெற்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்னாடக லெட்சதீவுகள், என இசைபயனதிற்காக சிறகை விரித்த இந்த இசைகுயில், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்ச்சி தலைவர் A.M.H.நாஜிம் தலைமையில் வெளியிட்ட ``அருள்ச்சோலை`` என்ற குருந்தகட்டிகாக ஆற்றிருக்கும் பணியை, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் பாரட்டி உள்ளார்.

சென்னையில் உள்ள முதன்மையான நிறுவனதில் பாடி புகழ் பெற்றுயிறுக்கும் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது. வானொலி நிலையங்களில் பல பாடல்களை பாடி உள்ளார். இவரது குரல்,பெற்ற இசைதட்டுகள் திருச்சி, மதுரை, , காரைக்கால், லன்டன், சிங்கப்பூர், ,மலேசியா, இலங்கை வானொலி நிலையங்களின், மூலம் ஒலிபரப்பி கொன்டுயிருகின்றன.. முன்னனி தொலைகாட்சி மூலம்மும் ஒளிபரப்பி கொன்டுயிருகின்றன.

புதுவை அரசு விழாகளிலும் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களிலும் இவரின் இசை நிகழ்ச்சி இடம் பெற்று உள்ளது . இவரது இசைநிகழ்ச்சி, பொதுமக்களிடம் பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது. இவெருகென்று தனி பாணியை வகுத்து தொய்வில்லாமல் துணிவும், செறிவும், இழையொடு இசை நடத்தும் இசைநிகழ்ச்சிகள் எல்லா மதத்தவரும் மயங்கி பராட்டி உள்ள்னர்.
முன்னாள் மத்திய மின்சாரத்துறை அமைச்சரும், துனை சபநாயகர் P.M.சயீது லெட்சதீவில் நடந்த விழாவில் விருது அளித்து பாரட்டி உள்ளார். இவருக்கு மலேசியா, நாட்டு பினாங்கு நகரில் 1974 ம் ஆண்டு ``இன்னிசைச்ச்டர்`` விருது வழங்கபட்டது. காரைக்கால் அனைத்து கலைஞ்கள் சார்பாக ``கலை ரத்னா``` விருது வழங்கபட்டது
.
கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது.பல்வேறு விருதுகள் பெற்ற இவர் புனித பயனமாக இஸ்ரெல் நாட்டில் பாலஸ்தீனம் பெத்லெஹெம், ஜெருசெலெம், , ஈராக் நாட்டில், பாக்தாத் , மற்றும் ஜொர்டான்,, ஆகிய நாடுகளுக்கு சென்று வந்த ஹாஜி.E.குல்முஹம்மது ,சௌதி அரேபியாவில் உள்ள மக்கா மதீனாவிற்கு புணித பயணம் சென்று வந்தவர்....
அன்மையில் ``சுவன தென்றல்`` என்ற தயாரிக்கபட்டு வெளியாகிறுக்கும் VCD யில் இவர் பாடியுள்ள இஸ்லாமிய பாடல்கள் பலரின் வரவேற்பை பெற்று உள்ளது.
அண்பும், இசைஆற்றலும், பெற்று இருக்ககூடிய இவர் எளிமையாக பழக க்கூடியவர்.. இப்ராஹிம்ஷா- சபியாபீவீ இனையரின் புதல்வரான ஹாஜி.E.குல்முஹம்மது தலைவர்கள், கவிஞ்ர்கள் பல்வேறு அரசு அதிகாரிகள் என எல்லோரின் பராட்டையும் பெற்று இந்த இனையருக்கு இசைவழி புகழை தேடி தந்துள்ளார். எழுச்சி தரும் இசையுலகில் இன்னிசைசுடராக ஒளியூட்டும் ஹாஜி.E.குல்முஹம்மது வின் இசை தொண்டு பாராட்டுகுரியது.தமிழ் உருது இந்தி பாடல்கள் பாடதெரிந்த இவர் தேச ஒற்றுமை பாடல்கள், மதணல்லிண்க்க பாடல்கள், பாரதியார் எழுச்சி பாடல்கள், பாடி ரசிகர்களை மகிழ்விதுள்ளார்.
30 ற்க்கு மேற்பட்ட ஒலிநாடகளில் வெளியாகியுள்ளன.அவைகளிள் ``அருள் சோலை`` கேஸட் ``சுவன தென்றல்`` ``பேரிறையோனே`` போன்ற பல தலைப்புகளில் அணைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளன. நாகூர் ஆண்டவர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்துவான் S.M.A.காதிர் அவர்களை தனது மாணசீக குருவாக ஏற்று கொன்ட இவர் , கலைமாமணி கவிஞ்ர் நாகூர்சலீம், கவிஞ்ர் காதிர் ஓலி , கவிஞ்ர்மஹ்மூது மரைகாயர், கவிஞ்ர் சாதிக் போன்ற பல கவிஞர்கள் பாடல் எழுதி கொடுத்துள்ளனர்.


காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,